கிடுக்கிப்பிடி நிருபர்கள் - வழிய வைத்தார் நயன்தாரா

24 April 2010 ·

கிடுக்கிப்பிடி நிருபர்கள் - வழிய வைத்தார் நயன்தாரா

கேள்விய பதிலால அடிக்கறதுன்னு ஒரு வழக்கம் இருக்கு. ஆனா கேள்விய 'வேறொரு விஷயத்தால' அடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? கொஞ்சம் பெங்களுரு வரைக்கும் வந்தா தெரிஞ்சுரப்போவுது!

கன்னடத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. உபேந்திரா ஜோடியாக இவர் நடித்து வரும் படத்தின் பெயர் கிச்சகா. நயன்தாரா ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றதுமே நிருபர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆஜராகிவிட்டார்கள். கேட்கிற கேள்வியில மனசுக்குள்ளே இருக்கிற பிரபுதேவாவை அந்தம்மா கக்கிரணும் என்கிற மாதிரி முறைப்பு ஒவ்வொரு நிருபரிடமும். (யாரு பெத்த புள்ளய யாரோ பிக்கப் பண்ணுறதுக்கு இவங்களுக்கு ஏன்யா இத்தனை ஆக்ரோஷம்) ஆனால் இவங்க வந்திருக்கறது தெரிஞ்சே கேரவேனை விட்டு இறங்கல நயன்தாரா. தனது உதவியாளரை அனுப்பி ஒவ்வொருத்தரோட பேரு, அவங்க வேலை செய்யுற பத்திரிகை நிறுவனம் எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு வரச்சொன்னார்.

லிஸ்ட் கைக்கு வந்ததும், பட்டு பட்டுன்னு வேலைகள் ஆரம்பமாச்சு. கவருக்குள்ளே 'கவுரவத்தை' நிரப்பி, பிரிச்சு பார்க்கிற நிமிடத்திலேயே ஒவ்வொருவரும் பீஸ் பீஸாகிற மாதிரி போட்டு அனுப்புனாராம். விஷயம் அவங்க கைக்கு போயி அரை மணி நேரம் கழிச்சு கீழே இறங்கிய நயன் நிருபர்களிடம், "அண்ணா பர்சனல் கேள்வி வேண்டாம். ப்ளீஸ்" என்ற கூற, அதுக்கு மேல அது பற்றி கேட்க அவங்க என்ன மனசாட்சி இல்லாதவங்களா என்ன?

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites