நான் இல்லை என்றால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்-பிரபுதேவா விளக்கம்

26 May 2010 ·

நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவுக்கும் இடையே நெருக்கமான காதல் இருந்து வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

பிரபுதேவா, திருமணம் ஆனவர். இவருக்கு ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர், பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கிறார். தனது காதல் பரிசாக, வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை நயன்தாரா,
பிரபுதேவாவுக்கு வழங்கி இருக்கிறார்.

அந்த சங்கிலியை பிரபுதேவா எப்போதும் கழுத்தில் அணிந்து இருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் ஜோடியாக வெளிநாடு போய் வருகிறார்கள்.

நயன்தாரா-பிரபுதேவாவின் காதல் விவகாரம், மனைவி ரமலத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவிடம் இருந்து கணவரை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று ரமலத் முயற்சி செய்து வருகிறார்.

அதன் முதல்கட்டமாக, ``நயன்தாரா என் கணவரை விட்டு விலகிவிட வேண்டும். இல்லையென்றால், அவரை எங்கேயாவது நேரில் பார்த்தால் அடிப்பேன்`` என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு எந்த பலனும் இல்லை. நயன்தாராவும், பிரபுதேவாவும் முன்பைவிட, இப்போது அதிக நெருக்கமாக நடந்துகொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ரமலத், தமிழ் பட உலகை சேர்ந்த சில பிரமுகர்களிடம் தனது நிலைமையை கூறி முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்`` என்று அழுதுகொண்டே கூறினார்.
அதைக் கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, `பஞ்சாயத்து` பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால், நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்`` என்று கூறிவிட்டார்.

அதனால் பஞ்சாயத்து பேச வந்தவர்கள், நயன்தாரா-பிரபுதேவா பிரச்சினையை கை கழுவி விட்டார்கள். 




3 comments:

ராஜ நடராஜன் said...
May 27, 2010 at 12:32 AM  

ரொம்ப முக்கியம்:)

நக்கீரன் தான் அவங்க பொழப்புக்கு ஏதாவது சொல்றாங்கன்னா அதையே காப்பி செய்து நீங்களுமா?

சொந்த சரக்கு ரொம்ப கிக்கு இருக்குன்னு
ஒரு பாட்டாவது பாடுங்கள்:)

Aathavan said...
May 27, 2010 at 1:36 AM  

நக்கீரன் m podudana??? sollavey illa....

Anonymous said...
May 28, 2010 at 10:15 AM  

அருவருப்பான பதிவுகளும் சீரழியும் கலாச்சாரமும்.

http://shayan2614.blogspot.com/2010/05/blog-post_28.html

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites