66 கிணறு தோண்டிய விவசாயி : ஆந்திராவில் ஒரு நவீன கஜினி

20 April 2010 ·




நலகொண்டா : விவசாயி ஒருவரின் விடா முயற்சியால், 66வது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைத்தது. ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலுவுரிமோகன் ரெட்டி; விவசாயி. இவருக்கு, நலகொண்ட மண்டலம் புலிகில்ல கிராமத்தில் 24 ஏக்கர் நிலம் இருந்தது. இவர், தனது நிலத்தில் 65 ஆழ்துளை கிணறுகளை தோண்டினார். ஆனால், ஒன்றிலும், சிறுதுளி கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இவர், கிணறு தோண்டுவதற்காக வாங்கிய, ஏழு லட்ச ரூபாய் வங்கிக் கடனை அடைக்க, தனது 14 ஏக்கர் நிலத்தை விற்றார். கடைசி முயற்சியாக, சமீபத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் செலவு செய்து, ஒரு ஆழ்துளை கிணறும், பெரிய கிணறும் வெட்டினார். இதில், போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைத்தது. தண்ணீர் கிடைத்த மகிழ்ச்சியில், மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites