செய்தி இரண்டு -அனுமதி கேட்டு பார்வதி அம்மாள் கடிதம்.இந்தியாவிடம் ராஜபக்சே கோரிக்கை

30 April 2010 ·

கலைஞரிடம் அனுமதி கேட்டு பார்வதி அம்மாள் கடிதம்

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இது குறித்து தற்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் முதல்வருக்கு கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இந்தியாவிடம் ராஜபக்சே கோரிக்கை

இந்த திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவ்விழா தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப் பச்சனை அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று திரைப்பட இயக்குனர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொல். திருமாளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி நக்கீரன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites