கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

22 April 2010 ·


இமாசலபிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நித்யானந்தா 4 சீடர்களுடன் கைது செய்யப்பட்டார். நித்யானந்தாவும், ஷீலம் ரெட்டியும் அந்த வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்வது கிடையாது. மற்ற 3 பேர்தான் அருகில் உள்ள மார்க்கெட்டுகளுக்கும், பிற இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

நித்யானந்தா தங்கி இருந்த வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 3 வீடியோ கேமரா, 3 லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் ஆஸ்பத்திரிரியில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

சாமியாருக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites