சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவியுள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாகவே இருந்தார்.
தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.
அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீஸூக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் சோதனை நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.
இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு. நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நித்தியானந்தா கைது செய்யப்பட்டபோது அவரிடம் 3 லட்சம் ரூபாய் இந்தியப் பணமும், 2,000 டாலர்கள் மதிப்புள்ள டிராவலர்ஸ் செக்கும் இருந்துள்ளன. போலீசார் அவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சட்டப்படியான நடைமுறைகளுக்காக தற்போது சிம்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நித்தியானந்தம். நாளை காலை சிம்லா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அங்கிருந்து உத்தரவு வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவரை கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.
இதற்கிடையே நித்யானந்தா மீது தமிழகத்தில் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது. அதில், அவரைக் கைது செய்து, வரும் மே மாதம் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நித்யானந்தா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் மோசடிப் புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் கென்கேரி என்ற இடத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. அங்கு வரும் பெண்களில் விவாகரத்தானவர்களை மட்டும் இவர் தேர்வு செய்வாராம்.
அவர்களில் சிவரை சர்வ சக்தி படைத்த என்னுடன் செக்ஸ் உறவு கொண்டால் உங்களுக்குரிய உரிமைகளை பெறலாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். வசிய வார்த்தைகள் மற்றும் அவரது வெளி வேஷத்தை பார்த்து மயங்கி பல பெண்கள் இவரது வலையில் விழுந்து இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது
நித்தியானந்தரும், 2 சீடர்களும் கைது – பணம் பறிமுதல்..!
சர்ச்சைக்குரிய சாமியார் பரமஹம்ஸ நித்தியான்நதா இன்று இமாச்சலப் பிரதேசத்தில் மறைந்திருக்கையில் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சீடர்களான நித்ய பக்தானந்தா மற்றும் கோபால்சீலம் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment