கொல்கத்தா அணி விற்பனை தொடர்பில் எவரும் உரிமை கோர முடியாது: ஷாருக்கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை சுனந்தா புஷ்கருக்கோ, வேறு எவருக்குமோ விற்க நான் முன்வரவில்லை. இது தொடர்பாக யாரிடமும் பேசியதும் இல்லை என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுனந்தா புஷ்கர், மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியாவார்.
கொச்சி அணி பங்குகளை வாங்கும் முன், கொல்கத்தா அணியின் பங்குகளை வாங்க பேச்சு நடத்தியதாக சுனந்தா புஷ்கர் ஏற்கனவே தெரிவித்த கருத்தை தொடர்ந்தே டிவிட்டர் இணையதளத்தில் ஷாருக்கான் மேற்படி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர், தனது தோழி சுனந்தாவுக்கு கொச்சி அணியில் 25 சதவீதம் பங்கு உள்ளது. இதில் 19 சதவீதம் அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுனந்தா புஷ்கர், மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியாவார்.
கொச்சி அணி பங்குகளை வாங்கும் முன், கொல்கத்தா அணியின் பங்குகளை வாங்க பேச்சு நடத்தியதாக சுனந்தா புஷ்கர் ஏற்கனவே தெரிவித்த கருத்தை தொடர்ந்தே டிவிட்டர் இணையதளத்தில் ஷாருக்கான் மேற்படி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர், தனது தோழி சுனந்தாவுக்கு கொச்சி அணியில் 25 சதவீதம் பங்கு உள்ளது. இதில் 19 சதவீதம் அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
கொச்சி அணியின் மதிப்பு ரூ. 70 கோடியாகும். இந்த பங்கை சசி தரூர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
சுனந்தா குறித்த தகவல்களை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் ஐபிஎல் அதிகாரிகளை தரூர் வலியுறுத்தியதாகவும் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும் மேற்படி குற்றச்சாட்டுகளை சசி தரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்
0 comments:
Post a Comment