ஹிமாச்சலில் நித்யானந்தா சாமியார் கைது

21 April 2010 ·




ஹிமாச்சல் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தா சாமியாரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ஹிமாச்சல் பிரதேச காவல்துறையினரின் உதவியுடன் நான்கு பேர் கொண்ட கர்நாடக காவல்துறை சிறப்புப் படையினர் நித்யானந்தாவை கைது செய்துள்ளனர்.

அம்மாநிலத்தின் ஆர்க்கி என்ற இடத்தில் ஒரு மாத காலமாக நித்யானந்தா பதுங்கியிருந்ததாகவும், இதுதொடர்பான தகவலறிந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் அவர் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நித்யானந்தாவை உடனடியாக பெங்களூரு கொண்டு வந்து விசாரிப்பது என கர்நாடக காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

பிடதியில் நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தா, நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3-ம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார், ஆஸ்ரம நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். அண்மையில், ஆஸ்ரமத்தைப் பார்வையிட்ட அவர்கள், சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

சில வாரங்களுக்கு முன்பும் நித்யானந்தா ஆஸ்ரமத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites