சோயிப்&சானியா பாதியில் முடிந்த வரவேற்பு

27 April 2010 ·


பாதியில் முடிந்த வரவேற்பு


லாகூர் : பாகிஸ்தானில் நடந்த சோயிப்&சானியா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாதவர்களும் ஏராளமான எண்ணிக்கையில் பங்கேற்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சானியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி லாகூரில் நடந்தது. பிரபலங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் குவிந்தனர். அப்போது சானியாவின் சகோதரர் அட்னன் வரவேற்பு மண்டபத்தில் நுழைந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் அமளி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அழைப்பிதழ் இருந்தால்தான் அனுமதி என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய சிலர், வரவேற்பு அழைப்பிதழை ரூ.10 ஆயிரம் விலைக்கு விற்றனர். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன சோயிப்&சானியா ஜோடியின் குடும்பத்தினர் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites