எந்த கட்சியில் சேருவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை..!'' - நடிகை குஷ்பு பரபரப்பு

29 April 2010 ·

எந்த கட்சியில் சேருவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை..!'' - நடிகை குஷ்பு பரபரப்பு


"எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், எந்தக் கட்சியில் சேர்வது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை`` என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு, `செக்ஸ்` பற்றி நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கு எதிராக, தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று குஷ்பு தொடர்ந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் குஷ்பு `அப்பீல்` செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஷ்புவுக்கு எதிரான 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில், குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக ஒரு தகவல் பரவியது. இது பற்றி குஷ்புவிடம் கேட்டபோது, "உங்களுக்கு பிடித்த கட்சி எது?`` என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு, ‘நான் எப்போதுமே காங்கிரஸ் கொள்கைகளை பின்பற்றுபவள். இந்திராகாந்தி மீதும், ராஜீவ்காந்தி மீதும் எனக்கு அதிகப் பற்று உண்டு’ என்றுதான் பதில் அளித்தேன். ‘காங்கிரஸ் கட்சியில் சேருவேன்’ என்று நான் சொல்லவில்லை.” என்றார்.

"அரசியலில் ஈடுபடுவீர்களா?`` என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், அரசியலில் கால்வைப்பது பற்றி இன்னமும் உறுதியான முடிவு எடுக்கவில்லை’ என்றுதான் சொல்லியிருந்தேன்.

"அப்படி அரசியலில் இறங்கினால் எந்த கட்சியில் சேருவீர்கள்?`` என்று கேட்டார்கள். அதற்கு, "அதையும் இன்னமும் முடிவு செய்யவில்லை`` என்று தான் பதில் அளித்ததாக குஷ்பூ கூறியுள்ளார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites