ஸ்கிரீன் ப்ளே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.ஆர்.மோகன்ராதா தயாரித்திருக்கும் படம், வாடா. ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோ சுந்தர் சி.
வழக்கமான சுந்தர் சி-யின் படங்களில் இடம்பெறும் காதல், மோதல், ரீமிக்ஸ் பாட்டு என அனைத்து கொத்துக்கறியும் வாடாவிலும் உண்டு. சிவா என்ற கதாபாத்திரத்தில் சுந்தர் சி. யும், ஜெயா என்ற கதாபாத்திரத்தில் ஷெரில் பிரிண்ட்டோவும் நடித்துள்ளனர். ஷெரில் பிரிண்ட்டோ படத்தின் நாயகி. இவர் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக வருகிறார்.
கோபி என்ற கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். கெட்டப் போடாமல் நடிக்க முடியாது என்ற வறட்சி நிலைக்கு தள்ளப்பட்ட இவர் இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனைப் போல் கெட்டப் போட்டு காமெடி செய்ய முயன்றிருக்கிறார்.
கோபி என்ற கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். கெட்டப் போடாமல் நடிக்க முடியாது என்ற வறட்சி நிலைக்கு தள்ளப்பட்ட இவர் இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனைப் போல் கெட்டப் போட்டு காமெடி செய்ய முயன்றிருக்கிறார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு கே.எஸ்.செல்வராஜ். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment