மங்கி பிங்கி பாங்கி!

22 April 2010 ·

மங்கி பிங்கி பாங்கி!


குரங்குகளிடம் அனுதினமும் அடி வாங்கும் கிராமத்தின் கதை இது! ஒரி¢ஸ்ஸாவின் புவனேஸ்வர் அருகே இருக்கிறது பாத்ரக் கிராமம். ஒருநாள் குரங்கு குரூப் ஒன்று, அந்தக் கிராமத்தின் மூன்று இளைஞர்களைத் தாக்கியது. கடுப்பான கிராம மக்கள், குரங்குகளைத் துரத்தித் துரத்தி அடித்தனர். பல குரங்குகள் படு காயமடைய, இரக்கப்பட்ட சிலர், அவற்றை மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றனர். சிகிச்சை காலத்தில், ஆல்கஹால் கலந்த டானிக்கைக் கொடுத்து குரங்குகளைத் தொடர் மயக்கத்திலேயே வைத்திருந்தனர். குணமான பிறகும் குரங்குகளுக்கு அந்தப் போதை தேவைப்பட்டது.

டிஸ்சார்ஜ் ஆனதும், பக்கத்தில் இருந்த மதுக் கடைக்குள் புகுந்துவிட்டன குரங்குகள். ஆரம்பித்தது வினை. தினம் மதுக் கடைக்கு குரங்குகள் படையெடுக்க, கடையையே மூடிவிட்டார்கள். போதை பழக்கமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாட்டில்களை அள்ளிச் செல்ல ஆரம்பித்தன. வீட்டில் பாட்டில் ஏதும் இல்லையென்றால், ஆட்களையும் கோபத்தில் அடி பின்னி எடுக்கிறதாம்.

இதனால், தினம் ஒரு கட்டிங் ப்ளஸ் மிக்ஸிங்கோடு வீட்டு வாசலில் பாட்டிலை

வைத்துவிடுகிறார்கள் பாத்ரக் மக்கள். செலவு கட்டுப்படி ஆகாததால், கோயில் பூசாரியிடம் சென்று பரிகாரம் கேட்டி ருக்கிறார்கள். சரக்கைப் போலவே போதை தரும் பச்சிலை ஒன்றை அரைத்து, தண்ணீர் கலந்து வீட்டு முன் வைக்கச் சொன்னாராம் பூசாரி.

இப்போது பச்சிலைச் சாறு சாப்பிட்டுப் போதையில் சலம்பிக்கொண்டு இருக்கின்றன குரங்குகள்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites