17 April 2010 ·

சினிமாவுக்கு குட்பை... நடிகை பூஜா முடிவு!

ஏப்.7,2010

பெற்றோர் விருப்பப்படி திருமண செய்துகொள்ளவுள்ள நடிகை பூஜா, சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

'நான் கடவுள்' மூலம் தனது நடிப்பாற்றலைப் பதிவு செய்த பூஜா, கடைசியாக நடித்திருப்பது, 'சுலந்ததனுனா ஜீவிதே' என்ற சிங்கள படம். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதுவே தனது கடைசி படமாக் இருக்கும் என்றும், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், " 'நான் கடவுள்' மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்காக, எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, எங்க அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. எனினும், என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பரந்த மனதுடன் நடிப்பதற்கு அனுமதித்தார்.

தற்போது, 'நீ நடித்தது போதும்' என்று அப்பாவும் அம்மாவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்து இருக்கிறேன்.

என் திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளவுள்ளேன். எனக்கு கணவராக வரப்போகிறவர்கள் அன்பாக இருந்தாலே போதுமானது. இலங்கையில் இருக்கும்
தாத்தா-பாட்டியின் கடைசி காலத்தில், அவர்கள் மீது என் அன்பை முழுமையாக செலுத்தப்போகிறேன்," என்றார் நடிகை பூஜா.

ஜே ஜே, தம்பி, நான் கடவுள் உள்பட பல படங்களில் நடித்துள்ளவர், பூஜா. இவருடைய தந்தை உமாசங்கர் கர்நாடக மாநிலம் சிருங்கேரியை சேர்ந்தவர். தாயார் சந்தியா, இலங்கையை சேர்ந்தவர். பூஜாவின் தாத்தாவும் பாட்டியும் இலங்கையில் வசித்து வருகிறார்கள்.

நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites