ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் இடைக்கால தலைவராக சிராயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடி மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததையடுத்து, அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சஸ்பெண்ட் செய்தது,. இந்நிலையில் ஐபிஎல் பிரச்சனை தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக அந்த அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. லலித் மோடி இல்லாமலேயே மும்பையில் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், துணைத் தலைவர், அருண் ஜேட்லி, செயலாளர் என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர், ஐபிஎல் அமைப்பின் இடைக்கால தலைவராக சிராயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லலித் மோடி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, ஐபிஎல் அமைப்பை நிர்வகிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் உள்ளடங்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிராயு அமீன், பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை வகித்து வருபவர். ஐபிஎல் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற அவர் கூறுகையில், "ஐபிஎல்-ஐ சுத்தப்படுத்துவதே எனது முதல் பணி. இப்போதுதான் சீசன் மூன்று முடிந்துள்ளது; அடுத்தத் தொடருக்கான திட்டம் வகுக்கப்பட தொடங்கப்பட்டுள்ளது. இப்போது எழுந்துள்ளை பிரச்னைகளைக் களைவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்," என்றார் அமீன்.ஐ.பி.எல். இடைக்கால தலைவராக சிராயு அமீன் நியமனம்
ஐ.பி.எல். இடைக்கால தலைவராக சிராயு அமீன் நியமனம்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment