நெஞ்சுவலி இல்லை - மருத்துவமனையில் இருந்து திருப்பப்பட்டார் நித்தியானந்தா!

28 April 2010 ·

நெஞ்சுவலி இல்லை -
மருத்துவமனையில் இருந்து திருப்பப்பட்டார் நித்தியானந்தா!

மத்திய புலனாய்வுப்பிரிவினரின் விசாரணையில் இருக்கும் போது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி, பெங்களூர் இருதய மருத்துவமனையில் அனுமதி பெற்ற சுவாமி நித்தியானந்தாவினை, அவருடைய உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான ஆபாச காட்சிகளினால், தலைமறைவகாக இருந்து வந்த நித்தியானந்தா, இமாச்சல பிரதேசத்தில் வைத்து கர்நாடக மத்தியபுலனாய்வுப்பிரிவினரால் அழைத்து வரப்பட்டார்.

அவரை நீதிமன்றில் ஆஜர் செய்த காவற்துறையினர், 6 நாட்கள் தமது காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

இந்நிலையில், தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக காவற்துறையினரிடம் நித்தியானந்தா கூறினார்.உடனடியாக அவரை ஜெயநகரில் உள்ள அரசு இருதய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, இ.சி.ஜி, இரத்த பரிசோதனை உட்பட, அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு தொடக்கம், நேற்று நண்பகல் வரை இடம்பெற்ற இப்பரிசோதனைகளை தொடர்ந்து, இவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தனர்.

தற்போது, மீண்டும் மத்திய புலனாய்வுப்பிரிவினரின் விசாரணைக்காக,நித்தியானந்தா அழைத்து செல்லப்பட்டுள்ளார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites