ரஞ்சிதா எனக்கு எதிராக எப்போதும் சாட்சி கூற மாட்டார் : நித்யானந்தா நம்பிக்கை

24 April 2010 ·


ரஞ்சிதா எனக்கு எதிராக எப்போதும் சாட்சி கூற மாட்டார் : நித்யானந்தா நம்பிக்கை



நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு தனக்கு எதிராக எந்தவித சாட்சியமும் அளிக்க மாட்டார் என்று தான் திடமாக நம்புவதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பெங்களூருக்கு கர்நாடக போலீஸால் அழைத்து வரப்பட்டபோது பத்திரிகையாளர்கள் நித்தியானந்தாவிடம் கேள்வி எழுப்பினார்கள். "அப்போது உங்களுக்கு எதிராக நடிகை ரஞ்சிதா சாட்சியம் அளிப்பாரா" என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு நித்யானந்தா "ரஞ்சிதா தமக்கு எதிராக சாட்சியம் அளிக்க மாட்டார் எனவும், தாம் எந்த தவறும் செய்யாத நிலையில் ரஞ்சிதா எதற்காக தமக்கு எதிராக சாட்சி கூறப் போகிறார் எனவும் பதில் அளித்தார். மேலும் ரஞ்சிதா தம்மை முழுதாக அறிந்தவர் என்பதால் தாம் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவர் அறிந்திருப்பார். எனவே ரஞ்சிதா எப்போதும் தனக்கு எதிராக பேசப் போவதில்லை" என நித்யானந்தா கூறினார்.

"ஏன் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்தீர்கள்?" என நித்யானந்தாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "நான் தலைமறைவாக இல்லை" எனவும் "நான் இருந்த இடம் பலருக்கும் அந்தப் பகுதியில் தெரியும்" எனவும் பதில் அளித்தார் நித்தியானந்தா

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites