சொந்த ஊர் திரும்பிய நயன்தாரா..!

24 April 2010 ·

சொந்த ஊர் திரும்பிய நயன்தாரா..!


எத்தனை நாள்தான் தமிழ்ப் படங்களுக்காக காத்திருப்பது என்ற விரக்தியில் சென்னையில் வழக்கமாகத் தான் தங்கும் ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு, தன் சொந்த ஊருக்கே போய்விட்டார் நயன்தாரா.

தமிழில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்ந்தவர் நயன்தாரா. ரஜினியுடன் மூன்று படங்களில் தலைகாட்டியவர். அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நயன், நிஜ வாழ்க்கையில் பிரபுதேவாவுடன் ஜோடி போட்ட கையோடு மார்க்கெட்டை இழந்தார். அத்துடன் அவரது தோற்றமும் பொலிவிழந்த நிலைக்கு மாறியதால், நயன்தாராவுடன் ஜோடி சேர தமிழில் இப்போது நடிகர்கள் தயாராக இல்லை.

இப்போது அவர் நடித்து வந்த ஒரே படம் ஆர்யாவின் “பாஸ் என்கிற பாஸ்கரன்” மட்டுமே. இநதப் படத்தின் படப்பிடிப்பும் கூட முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை வேறு புதுப்படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் தனது தாய் மொழியான மலையாளத்துக்கே திரும்ப முடிவு செய்தவர், சென்னையில் தான் தங்கியிருந்த ஹோட்டலையும் காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.

மலையாளத்தில் இயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கும் ‘எலக்ட்ரா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். அப்படியே நம்மூரு டான்ஸ் மாஸ்டரையும் கைவிடுவாரா என்பதுதான் தற்போதைய கேள்வி..!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites