தூரிகைத் துயரங்கள்!

14 May 2010 ·

தூரிகைத் துயரங்கள்!

விதைக்குக் கருவாய்... ஓவியத் துக்கு உயிராய் ஆனதைத் தவிர, ஈழத்தால் எது வாய்த்தது? முள்ளிவாய்க்கால் கொடூரங்களை உலகம் அறியாமல் துடைக்க இலங்கை அரசாங்கம் எவ்வளவுதான் முயன்றாலும், படைப்பாளிகளுக்குத் தடை போட முடியுமா? ஈழத்தின் போர் முகங்களை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

25 ஆண்டுகளாகத் தூரிகையைக் கையில் ஆயுதமாக ஏற்றிருக்கும் ஓவியர், ஈழ மக்களின் அவலங்கள் குறித்துதான் அதிக ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

''ரத்தக் கண்ணீர் வடித்த மக்களது அவலங்களை இதுவரை வரைந்த எனது தூரிகை, இப்போது அந்தக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்த புலிகளின் போராட்டத்தையும் வரைந்திருக்கிறது. இந்த 80 ஓவியங்களையும் மொத்தமாகப் பார்க்கும்போது, ஈழப் போராட்டத்துக்கு யாரும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றே தோன்றுகிறது. மக்கள் அவலம் தொட ரும் வரை போராட்டம் தொடரும். அதுவரை எனது தூரிகைக்கும் ஓய்வுஇல்லை'' என்கிறார்.

ஏற்கனவே, ஈழக் காடுகளுக்குப் போய் புலி ஓவிய ஆர்வலர்களுக்கு வரைகலைப் பயிற்சி அளித்துத் திரும்பியவர் புகழேந்தி. ''என்னை ஓவியனாகத்தான் ஈழத்துக்குத் தெரியும். என் ஓவியங்களின் மூலம் எல்லோரும் ஈழத்தைப் பாருங்கள்'' என்கிறார் வேதனையுடன்!

-Vikatan

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites