5 கேள்விகள் நாஞ்சில் சம்பத்திடம்... '' 'பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியதற்குக் காரணம் அ.தி.மு.க-தான்' என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?'' ''அ.தி.மு.க. இன்றைக்கு அதிகாரத்தில் இல்லை. அதிகாரத்தில் இல்லாத கட்சி மீது இப்படி ஒரு பழிபோடுவது என்ன நியாயம். முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் இப்படி ஓர் அறிக்கையை விடுவதற்கு தொல்.திருமாவளவன் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்களை முறைத்துக்கொண்டால் ஆதாயங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதுகிறாரோ என்னவோ?'
வேல்முருகன் எம்.எல்.ஏ-விடம்...
''தி.மு.க-பா.ம.க. கூட்டணி முடிவாகிவிட்டதாகக் கூறுகிறார்களே?''
''இப்போதைக்கு எதையும் அதிகாரபூர்வமாகச் சொல்ல முடியாது. யாருடன் கூட்டணி என்பதை மருத்துவர் ஐயா மற்றும் சின்ன ஐயா தலைமையில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடித் தீர்மானிக்கும். இப்போது சொல்லப்படுவை அனைத்தும் வதந்திகள்தான்!'
மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணனிடம்...
''அ.தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது என்று பிருந்தா காரத் சொல்கிறார். ஆனால், நீங்கள் ஜெயலலிதா நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறீர்களே?''
''பாரத் பந்த்பற்றித்தான் பேசப் போனோம். தேர்தல் கூட்டணிபற்றிப் பேசவில்லை. மக்கள் பிரச்னைக்காக ஒன்றிணைந்து போராடுவதில் தவறில்லை!''
அசினிடம்...
''கேரவனில் கேஸ் கசிந்ததாக வெளியான விவகாரம் படத்துக்கான பப்ளிசிட்டியா?''
''இந்தியில் அசினுக்குப் படமே இல்லை... சல்மான் கானைக் காதலிக்கிறார்... அமீர் கானுடன் டிஸ்கொதே போகிறார் என்றெல்லாம் நடக்காததை நடந்தது போன்றுஎழுதுவார்கள். அதையும் நீங்கள் நம்புவீர்கள். ஆனால், விஜய் படப்பிடிப்பில் இருக்கும்போது கேரவனில் கேஸ் கசிந்தது என்றால் பப்ளிசிட்டி என்பீர்கள். இதுதான் உலகம்!''
பாவனாவிடம்...
''விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால்தான் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாகக் கூறுகிறார்களே?''
''நடிப்பு என் தொழில். அதைப்பற்றி வேண்டுமானால் கேளுங்கள், சொல்கிறேன். திருமணம் என் சொந்த விஷயம். ம்... இப்போதைக்குத் திருமண ஐடியா இல்லை. பிடித்த கதாபாத்திரம் வந்தால் மட்டும்தான் நடிப்பேன்!'
0 comments:
Post a Comment