மும்பை : Ôவாரணம் ஆயிரம்Õ, Ôஅசல்Õ படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை சான்டாகுரூஸ் விமான நிலையம் அருகே கார் ஓட்டியபடி சமீரா சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டிராபிக் காவலர் ஒருவர், சமீராவின் காரை நிறுத்தினார். Ôநீங்கள் மொபைலில் பேசியபடி காரை ஓட்டிவந்தீர்கள். காரைவிட்டு வெளியே வாருங்கள்Õ என்றார். காரிலிருந்து இறங்கிய சமீரா, Ôநான் மொபைலில் பேசவில்லை. பாடல் கேட்டபடி, முணுமுணுத்துக் கொண்டே வந்தேன்Õ என்றார். ஆனால் அதை அந்த காவலர் ஏற்கவில்லை. Ôசரி அபராத தொகை சொல்லுங்கள். அதற்கான புகாரையும் எழுதுங்கள்Õ என சமீரா கேட்டார். அது எல்லாம் எழுத முடியாது என காவலர் மறுத்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு டிராபிக் போலீஸ்காரரும் சமீராவின் விளக்கத்தை கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது. Ôநீங்கள் எல்லாம் சினிமா ஸ்டார் மேடம். பெரிய ஆளுங்க எல்லாம் இந்த விஷயத்துக்காக கோர்ட்டுக்கு வருவீங்களா?’ என அந்த போலீஸ்காரர் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சமீரா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்து அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. கூட்டத்தில் இருந்த சிலர், சமீராவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதையடுத்து டிராபிக் போலீசார், சமீராவை அனுப்பிவைத்தனர். Ôநான் சொல்வதை கேட்க அவர்கள் மறுத்தனர். புகார் எழுதாமல் எப்படி பணம் மட்டும் கேட்கிறார்கள் என புரியவில்லை. நான் தவறு செய்யாதது அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. ஒரு பைசாவும் நான் தரவில்லை. அங்கிருந்து வந்துவிட்டேன்Õ என்றார் சமீ
0 comments:
Post a Comment