லண்டன் : இங்கிலாந்தில் கோடீஸ்வரிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டில் அது 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுபற்றி துலிப் பைனான்சியல் ரிசர்ச் என்ற நிறுவனம் விரிவான கணக்கெடுப்பு நடத்தியது. 2.5 மில்லியன் பவுண்டுக்கு (ரூ.17 கோடி) மேல் சொத்துள்ள பெண்கள் பற்றி புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த பட்டியலில் இப்போது 72,000 பெண் கோடீஸ்வரர்கள் இருப்பது அதில் தெரிய வந்தது. 2005ம் ஆண்டில் இருந்த கோடீஸ்வரிகள் எண்ணிக்கையை விட இப்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற ‘ஹாரி பாட்டர்’ கதைப் புத்தக எழுத்தாளர் ஜே.கே. ரோலிங் (44) ரூ.3,800 கோடி சொத்துடன் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பிரபல பேஷன் டிசைனர் நடாலி மாசெனட் (44) ரூ.340 கோடியும், பாடகி ஜூடி கிராமெர் (52) ரூ.510 கோடியும் சொத்து வைத்துள்ளனர்.
இதுபற்றி பெண் ஆதரவு எழுத்தாளர் ரோசாலிண்ட் மைல்ஸ் கூறுகையில், ‘‘தொழிலதிபர்களாக பல பெண்கள் உருவாகின்றனர். எனினும், வங்கிக் கடன் அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே நீடிக்கிறது. கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பெண்ணுக்குப் பின்னால் ஆணின் உத்தரவாதம் கேட்கப்படுகிறது’’ என்றார்.
கோடீஸ்வர பெண்கள் இங்கிலாந்தில் அதிகம்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment